சென்னை:
வருது... காஷ்மோரா... தீபாவளிக்கு வருது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. அவ்வளவு நாளா என்று கார்த்தியின் ரசிகர்கள் நொந்து போய் உள்ள நிலையில் படம் ரொம்ப தள்ளி போக காரணமும் தெரிந்துள்ளது.


காஷ்மோரா ஆரம்பித்த நாளில் இருந்து கிடுகிடுவென வளர்ந்து வந்தது. இடையில் என்ன ஆனதோ... எவ்வித செய்திகளும் இல்லாமல் இருந்தது. இந்த படத்தில் 3 வித்தியாசமான வேடங்களில் கார்த்தி நடிக்க கோகுல் இயக்கினார். பிரமாண்டமாக தயாரான இந்த படம் இடையில் சுணங்கி மீண்டும் ஸ்டார்ட் ஆகி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.


படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விரைவாக நடந்து   வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. என்ன தெரியுங்களா?


தற்போது 80 நிமிடத்திற்கும் மேலான கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படம் தமிழ்ம ற்றும் தெலுங்கு மொழிகளில் தீபாவளியன்று வெளியாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகளுக்காகத்தான் இத்தனை நாட்கள் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்கள். சரி தீபாவளிக்கு சரவெடியை வெடிக்கட்டும் காஷ்மோரா.


Find out more: