சென்னை:
மகன் கூட பார்க்காம செம டப் கொடுத்து இருக்காருங்க... இவரோட நடிக்கும் போது சுதாரிப்பா இல்லாட்டி நம்மளை தூக்கி முழுங்கிடுவார்ன்னு சொல்லியிருக்கார் வாரிசு நடிகர் ஒருவர். யார் தெரியுங்களா?


நம்ம சிபிராஜ்தான். எதற்காக இந்த ஸ்டேட்மெண்ட். நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு சிபிக்கு நல்ல பெயர். இப்ப படங்கள் தாராளமாக புக் ஆக ஆரம்பிச்சிருக்கு. இவர் தன் அப்பாவோட சேர்ந்து நடிச்சிருக்கிற படம் ஜாக்சன் துரை. அடுத்து சோலா ஹீரோவாக கட்டப்பாவை காணோம் செய்யறார். அடுத்து ஒரு ரீமேக் படத்துல நடிக்க இருக்கிறார்.


இப்படி பிஸியாக ஆரம்பிச்சுட்டார் சிபி. இவர் ஜாக்சன் துரை படத்தில நடிச்சது பற்றி சொல்லும்போது, முதல்முறையா அப்பா பேய் வேஷத்துல நடிக்கிறார். இவர் கூட நடிக்கும்போது ரொம்ப உஷாரா இருக்கணும். டைமிங் கேப்புல தூக்கி சாப்பிட்டு விடுவார். மகன்தானேன்னு விட்டு கொடுக்காம செம டப் கொடுத்து நடிச்சிருக்கார்ன்னு தன் அப்பா பற்றி பெருமையாக சொல்லியிருக்கார்.
தந்தை உடையான் படத்திற்கு அஞ்சான்.

சிபிராஜின் தந்தை சத்யராஜ் 



Find out more: