சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரெமோ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறவர் ஆர்.டி.ராஜா. சிவகார்த்திகேயனின் நண்பர். ரெமோ தவிர மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் படத்தையும் தயாரிக்க இருக்கிறார். இதற்கிடையில் ஆர்.டி.ராஜா கதாசிரியராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் கதி திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். 


அதனை பிரியதர்ஷன் உதவியாளர் பிரபு ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். நிவின் பாலி ஹீரோவாக நடிக்கிறார், ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. "இயக்குனராக வேண்டும் என்பதற்காக சினிமாவுக்கு வந்தேன். சந்தர்ப்பசூழ்நிலையால் தயாரிப்பாளர் ஆனேன். நீண்ட காலமாக என் மனதில் இருந்த கதைக்கு தற்போது திரைக்கதை வடிவம் கொடுத்துள்ளேன். 


தொடர்ந்து படத் தயாரிப்பில் இருப்பதால் படம் இயக்குகிற அளவிற்கு தற்போது நேரம் இல்லை. அதனால் கதையை அறிமுக இயக்குனரிடம் கொடுத்து இயக்கச் சொல்லியிருக்கிறேன். அதை நானே தயாரிக்கிறேன். விரைவில் படம் இயக்குவேன்" என்றார் ஆர்.டி.ராஜா.



Find out more: