கடந்த 2011-ம் ஆண்டு, ஜெய்-அஞ்சலி இணைந்து நடித்த 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இந்த படத்தை அடுத்து இந்த ஜோடிகள் இணைந்து நடிக்காது இருந்து வந்த நிலையில், தற்போது இருவரும் இணைந்து ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த தகவலை ஜெய் மற்றும் அஞ்சலி தங்கள் சமூக வலைதளத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர். ரொமான்ஸ் மற்றும் திகில் கலந்து உருவாகும் இந்த படத்தை சினிஷ் என்பவர் இயக்குகிறார். 
இதில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் துணை நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


மேலும் ஜெய் அஞ்சலியின் கெமிஸ்ட்ரி இந்த படத்திலும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find out more: