இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது 'அகிரா' என்ற பாலிவுட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சோனாக்ஷி சின்ஹா முக்கிய ரோலில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்து மெகா பட்ஜெட் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். 


இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்குவில் உருவாக்கவுள்ளது. இதில் மகேஷ் பாபு ஹீரோவாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக பரினீதி சோப்ரா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது.


ஆனால் தற்போது இயக்குனர் முருகதாஸ், பரினீதி சோப்ராவிற்கு பதில் நடிகை ராகுல் ப்ரீத் சிங்க்கை தேர்ந்தெடுத்துள்ளார்  என தகவல்கள் வந்துள்ளன. மேலும் இதன் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.

ராகுல் ப்ரீத் சிங்க்


மேலும் ராகுல் ப்ரீத் சிங், விஷால் உடன் இணைந்து 'துப்பறிவாளன்' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.


Find out more: