சென்னை:
பாக்ஸ் ஆபீஸ் மன்னர்களையே பதம் பார்த்து விட்டார் இவர் என்கின்றனர் கோடம்பாக்கத்து கோபாலுக்கள். விஷயம் செம ஹாட்தான்ங்க.


தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்றால் அது விஜய், அஜித்தான். இவர்கள் படம் வருகிறது என்றாலே ஒரு வாரத்திற்கு திரையரங்குகள் ஹவுஸ்புல். இந்த கணக்கில் சூப்பர் ஸ்டாரை கணக்கில் எடுத்து கொள்ளக்கூடாது. அவர் வழி தனிவழி.


விஜய்க்கும், அஜித்திற்கும் முன்பதிவிலேயே அரங்கம் நிறைந்துவிடும், அப்புறம் ரசிகர்கள் ஷோ தனி. அப்படியிருக்க சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு மாபெரும் சாதனையை செய்திருக்காம்.


சென்னையின் பிரபல மாலில் இந்த படம் வெளிவந்த 5 நாட்களில் 100 காட்சிகள் ஹவுஸ்புல்லாகி வெற்றிநடைப்போடுகிறதாம். இதனால் தற்போது மாஸ் ஓப்பனிங்களில் சந்தானமும் ஜாயின்ட் ஆகி இருக்காராம்.


Find out more: