தனுஷ் நடித்த 'மாரி' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் உள்ள ''பட்டு னு அடிச்சா பொட்டுன்னு போய்டும்...ஒரு நாள்'' இந்த டைலாக் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதையடுத்து, மாரி திரைப்படத்தின் இராண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இந்த தகவலை இயக்குனர் பாலாஜி மோகன், தனது சமூக வலைதளத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் பதிவு செய்திருந்தது பின்வருமாறு,


'எங்களுக்கு இவ்வளவு ஆதரவு அளித்ததற்கு அனைவருக்கும் நன்றி... மாரி-2 முன்பணிகள் நடைபெற்று வருகின்றன... இந்த படத்தின் ஸ்க்ரிப்ட் பணியை நான் தற்போது செய்து வருகிறேன். அடுத்த வருட தொடக்கத்தில், படப்பிடிப்பு தொடங்கப்படும்' 


இவ்வாறு பாலாஜி மோகன் பதிவு செய்துள்ளார். அதனால் 'மாரி-2' விரைவில்..... வரப்போகுது...



Find out more: