சென்னை:
வாங்க... வாங்க... மீண்டும் அழைப்பு விடுத்து இருக்கு புதுச்சேரி. யாருக்கு தெரியுங்களா? வேறு யாருக்கு நம்ம கபாலிக்குதான்.
''புதுச்சேரி மக்களின் ஒழுக்க நிலையை மாற்ற, நடிகர் ரஜினிகாந்த், விளம்பர துாதராக செயல்பட அழைப்பு விடுத்துள்ளோம்,'' என்று துணை நிலை ஆளுனர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநில வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை, சரிவர எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்துவது என்பது குறித்து புதுச்சேரி முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.


மக்கள் திறந்தவெளியில், மலம் கழிப்பதை முற்றிலும் ஒழிக்க, ரஜினிகாந்தை நல்லெண்ண துாதராக செயல்பட அழைப்பு விடுத்துள்ளோம். அவர் குடும்பத்தினருடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர் துாதராகும் பட்சத்தில் சுகாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். கபாலி சொன்னா மக்கள் கேட்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது போலும்...


Find out more: