சென்னை:
யாரோ... யாரோ... அவர் யாரோ என்று தவியாய் தவித்த ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி... என்ன தெரியுங்களா?


தெறிக்க விட்ட கூட்டணி மீண்டும் சேர்கிறார்களாம். என்னங்க புரியலையா... இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் இப்போ... ஏறத்தாழ முடியும் கட்டத்தில் உள்ளதாம். 


இப்போ அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் பிரமாண்டமான படம்தான் அடுத்த படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியான நிலையில் அந்த படத்தில் விஜய் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


தற்போது கோலிவுட்டில் கிசுகிசுக்கும் இனிப்பான செய்தி என்னன்னா? தெறிக்க விட்ட கூட்டணியான விஜய்-அட்லிதான் மீண்டும் கூட்டணி போடுறாங்களாம். இந்த படத்தை சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறாங்க என்று வலுவான செய்திகள் உலா வருதுங்க...
வருதுங்க.. 'தெறி' போலவே இந்த படமும் ஒரு ஆக்சன் எண்டர்டெயின்மெண்ட்டாக இருக்குமாம். கலக்குங்க... தளபதி....


Find out more: