சென்னை:
கண்கலங்கினார்... பழைய நினைவுகளில் மூழ்கினார்... திரைக்கதை வித்தகர்.... ஏன் என்று தெரியுங்களா?


விஷயம் இதுதான். குழந்தைகளை வைத்து நடத்தப்படும் அனைத்துகளும் ஹிட் அடிப்பதால் தொலைக்காட்சிகள் யோசித்து, யோசித்து புதுசு புதுசா நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து வருகின்றன.


இதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜீனியர் சூப்பர்ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சி புதிதாக தொடங்கியுள்ளது. இங்குதான் நடந்தது ஒரு கண்ணீர் கதை. என்ன தெரியுங்களா?


இந்த போட்டி நடுவர்களாக பாக்யராஜ், குஷ்பு, தொகுப்பாளர் அர்ச்சனா ஆகியோர் உள்ளனர். இதில் ஒரு குழந்தை பணத்தை நோக்கி ஓடும் தந்தையிடம் பேசுவதற்காக பிச்சை எடுப்பது போல் நடித்த காட்சிதான் நடுவர்கள் மட்டுமின்றி பார்த்த அனைவரையும் கலங்கச் செய்தது. 


இதில் நடிகர் பாக்யராஜ் செம எமோஷனலாகி நான் உச்சத்திலிருந்த காலத்தில் என் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட முடியாமல் போனது வருத்தம் தான் என்று கண்கள் கலங்க சொன்னது அவரது மறைக்க இயலாத இதயத்தை காட்டி விட்டது.


Find out more: