பாலிவுட்டில் வெளிவந்த 'பேண்ட் பாஜா பாராட்' திரைப்படத்தின் மூலம் ரன்வீர் சிங்க் அறிமுகமானார். இந்த படத்தில் சிறப்பாக நடித்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 


இவரை பற்றி நாம் அறிந்திராத 8 முக்கியமான விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவற்றை இப்போது விரிவாக பார்க்கலாம். 


1. ரன்வீர் சிங்க்கும், நடிகை சோனம் கபூரும் கசின்ஸ். இருவரும் நெருங்கிய உறவினர்கள்.


2. ரன்வீர் சிங்க், ஓ & எம் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றியவர் 


3. ரன்வீரின் முழு பெயர் ரன்வீர் சிங்க் பாவ்னானி. கடைசி பெயர் பாவ்னாணியை அவர் நீக்கிவிட்டார்.


4. 'பேண்ட் பாஜா பாராட்' திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு, ரன்வீர் மூன்று திரைப்படங்களில் நடிக்க மறுத்துள்ளார். 


5. ராம் - லீலா திரைப்படத்தில், ரன்வீரின் நடிப்பை பார்த்து, அமிதாப் பச்சன், தனது கைப்படி பாராட்டுக் கடிதம் ஒன்று எழுதி, அதன் மூலம் ரன்வீரை பாராட்டினார். 


6. ரன்வீர், நடிகை அனுஷ்கா ஷர்மாவின் தீவர ரசிகர். அதனால்  'பேண்ட் பாஜா பாராட்' திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில், அனுஷ்கா உடன் பணியாற்ற பயந்தாராம்.


7. ரன்வீருக்கு தனது அம்மாவை மிகவும் பிடிக்கும். அதனால் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை, அம்மாவின் சம்மதத்துடன் தான் செய்வாராம்.


8. ரன்வீர் தனது ஸ்டைலை வைத்தே பெண்களை கவர்ந்து விடுவாராம் அன்பளிப்பு, பூக்கள் போன்றவற்றை அளிக்காமல் தன் மீது பெண்களை காதலில் விழ செய்வாராம்.


Find out more: