கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கும் 'காற்று வெளியிடை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் 'கொம்பன்' முத்தையா இயக்கத்தில் புது படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளிவந்தன. 


ஆனால் தற்போது கார்த்தி தனது அடுத்த படத்தை முறையாக அறிவித்துள்ளார். அவர் அடுத்து 'சதுரங்க வேட்டை' இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும் இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம்.


இதன் படப்பிடிப்பு வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிகட்ர்ஸ் தயாரிக்கவுள்ளது.


Find out more: