சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, 'கோச்சடையான்' திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. 


இந்நிலையில் அவர் அடுத்து தனுஷை வைத்து, ஒரு புதுப்படம் இயக்கப்போவதாக பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது இதற்கு சௌந்தர்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது....


நான் அடுத்து காமெடி,ரொமான்ஸுடன் கூடிய ஜாலியான கதையை இயக்க போகிறேன். இதன் கதை தற்போது தயாராகி விட்டது. இதில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது, உண்மையல்ல. இதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையை நானே முறையாக அறிவிப்பேன் என கூறினார்.


மேலும் அவர்  ரஜினியின் வாழ்க்கை வரலாறை கொண்டு, ஒரு படம்  படம் விரைவில் உருவாக உள்ளது என்றும், இதை நான் இயக்க போவதில்லை என்றும் தெரிவித்தார்.


Find out more: