சென்னை:
என்னை சுற்றி வரும் செய்திகள் வதந்திதான் என்று கூறி பெரிய முற்றுப்புள்ளியை வைத்துள்ளார் இவர்.


யார் தெரியுங்களா? தமிழ் படமான 5 ஸ்டாரில் அறிமுகமான கனிகாதான். தமிழ், மலையாளம் என்று 2 மொழிகளிலும் தனது திறமையால் கலக்கியவர் நடிகை கனிகா.


பீல்டில் பிசியாக இருக்கும் போதே இவர் ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவரை பற்றிதான் தற்போது அதிகளவில் வதந்திகள் உலா வந்தன. என்னவென்றால் கனிகா தனது கணவரை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்று.


பொறுத்து பொறுத்து பார்த்த அவர் இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், என்னை பற்றி ஒரு பெரிய வதந்தி சுற்றி வருகிறது. நானும் என் கணவரும் சந்தோஷமாக வாழ்கிறோம். நாங்கள் திருமணமான புதிதில் எப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்தோமோ அப்படியேதான் இன்றுவரை இருக்கிறோம்.


பொய்யான வதந்திகளை நம்பவேண்டாம் என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நல்லா வாழ்கிறவர்களை ஏன் இப்படி வதந்தியால் வாட்ட வேண்டும்... வதந்தி பரப்புபவர்களே யோசியுங்கள்... நடிகையாக இருந்தாலும் அவரும் பெண்தான்...


Find out more: