சென்னை:
அவருக்கும், அந்த சேனலுக்கும் ஏழரை பொறுத்தமாகத்தான் இருக்கும் போல. அந்த நடிகை செய்யும் பஞ்சாயத்து சீரியலை குளோஸ் செய்ய களத்தில் குதித்துள்ளதாம் இந்த சேனல்.


பல படங்களில் அம்மா கேரக்டரில் நடித்த அந்த நடிகை ஒரு சேனலில் பஞ்சாயத்து செய்துவைக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது அவர் கூறிய ஒரு வார்த்தையை மற்றொரு சேனல் காமெடியாக்கியது. இந்த வார்த்தை சினிமாவரைக்கும் வந்து சேர்ந்தது. 


இதனால் அந்த பஞ்சாயத்து நடிகைக்கும், அந்த சேனலுக்கும் ஏழரை பொறுத்தமாகிவிட்டது. இந்த விவகாரம் போலீஸ் வரைக்கும் சென்றதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் பஞ்சாயத்து செய்யும் அந்த நிகழ்ச்சியை காலி செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ள அந்த சேனல் அதேபோல் வேறு தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை விரைவில் தொடங்க இருக்காங்களாம்... 


இந்நிகழ்ச்சி சமூக பிரச்னைகளை அலசி ஆராய போகிறதாம். என்னமோ... போங்க...


Find out more: