சென்னை:
குடும்ப பஞ்சாயத்துக்களை குழாயடி சண்டை ரேஞ்சுக்கு வீதிக்கு கொண்டு வந்துவிட்டது சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி, இதில் வந்த ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ஒரு உயிர் பறிபோய் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சின்னத்திரையின் பஞ்சாயத்து நடிகையாகவே லட்சுமி ராமகிருஷ்ணனை சொல்லாத குறைதான். குடும்பச்சண்டைகளை தெருவுக்கு கொண்டு வந்து டிஆர்பியில் முன்னணிக்கு வருகிறது அந்த சேனல். நல்லது ஒன்று நடத்தினால் பல கெடுதல்களும் நடந்து வருகிறது.


சமீபத்தில் இந்த நிகழ்ச்சியால் ஒருவர் உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. லாரி ட்ரைவர் ஒருவர் தன் மகள்களிடமே தவறாக நடந்துக்கொள்ள முயற்சி செய்தார் என கூறப்பட்டது அதை ஒளிப்பரப்ப மாட்டோம் என கூறியுள்ளனர்.


ஆனால் சொன்ன சொல்லை மீறி ஒளிப்பரப்பியதால் அவமானம் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார், தற்போது அவர் அப்படிப்பட்டவர் இல்லை என அவருடைய குடும்பத்தினரே சொல்ல ஆரம்பித்து விட்டனர். 


இந்த தற்கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அந்த தொலைக்காட்சி மீது புகார் கொடுக்க சென்ற போது லட்சுமி ராமகிருஷ்ணன் பெயரை இதில் இருந்து எடுங்கள் என்று கூறிவிட்டு தான் புகாரை எடுத்துள்ளனர் போலீசார். ஏன்.... அவர் பெயரை மட்டும் விடுவிக்க வேண்டும். போலீசாருக்கு இப்படி உத்தரவிட்டது யார் என்பதுதான் தற்போது இமாலய கேள்வியாக எழுந்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பது யார்? என்று நெட்டிசன்கள் குடைந்து எடுத்து வருகின்றனர்.



Find out more: