சென்னை:
சூப்பர் ஸ்டார் படத்தின் படப்பிடிப்பால் இடையூறு ஏற்பட்டதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. ஆனால் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. 


மற்ற காட்சிகள் படமாக்கப்படுகிறது. இப்படத்திற்காக ஷங்கர் சமீபத்தில் ஒரு காரில் குண்டு வெடிப்பது போல் ஒரு காட்சியை படமாக்கியுள்ளார்.


இதற்காக ஒரிஜினல் குண்டையே பயன்படுத்தி வெடிக்க வைக்க, அந்த இடமே புகை மூட்டத்தில் சூழ்ந்துவிட்டது. காட்சி ரியலாக வந்தாலும்... மக்களுக்கு இதனால் பெரும் அவஸ்தை உண்டாகி உள்ளது. 


Find out more: