இயக்குனர் பாலாவிற்கு,  தமிழசினிமாவில் நல்ல மரியாதை உண்டு. பொதுவாக இவர் இயக்கும் படங்கள் தனித்து தெரியும். பல முன்னணி நடிகர்கள், இவர் படத்தில் நடித்து பிரபலமடைந்துள்ளனர். 


அப்படிப்பட்ட பாலாவை பார்த்து இன்று சில நடிகர்கள் பயந்து ஓடுகின்றார்களாம். விஷயம் என்னவென்றால்.... 


'தாரை தப்பட்டை' திரைப்படத்திற்கு பிறகு பாலா, ஆர்யா, விஷால், அதர்வா, ராணா, அரவிந்த் ஸ்வாமி ஆகியோரை வைத்து ஒரு புதுப்படம் இயக்குவதாக இருந்தது. இதுகுறித்து பாலா இந்த நடிகர்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளார். ஆனால் இந்த ஹீரோக்கள், இவர் படத்தில் நடித்தால் 1 வருடத்திற்கு வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாது என்பதனால்  பின்வாங்கி விட்டார்களாம்.


அதனால் தான் பாலா, இந்த படத்தின் திட்டத்தை கைவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றன. 


Find out more: