'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த சுனைனாவிற்கு, சமீப காலத்தில் படவாய்ப்புகளே இல்லாமல் இருந்தது. அதனால் அவர் வீட்டிலே முடங்கி கிடந்தார். 


அதன் பிறகு, அவருக்கு ஸ்ரீகாந்த் நடித்த 'நம்பியார்' திரைப்படத்தில் நடிக்க  வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த படம் வெளிவராமல், கிடப்பிலே இருந்து, அண்மையில் வெளிவந்தது. 


இதில் சுனைனாவின் நடிப்பை பார்த்த சில இயக்குனர்கள், அவரை தங்கள் திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்ய, ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுதான் சரியான சமயம் என்று, சுனைனாவும் எல்லா படத்திற்கும் புக்காகி வருகிறாராம். இதனால் மற்ற நடிகைகள் சோகத்தில் உள்ளனர்.


எப்படியோ மார்க்கட் அந்தஸ்து உயர்ந்ததே, அது போதும்....


Find out more: