தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கிய திரைப்படங்களில், அறிமுக நட்சத்திரங்களாக நடித்தவர்கள், தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளனர். 


மணிரத்னம் தற்போது 'காற்று வெளியிடை' என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இதில் கார்த்தி மற்றும் அதிதி ராவ் இருவரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. 


இந்நிலையில் மணிரத்னம் அடுத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் கதாநாயகன் குறித்த  செய்திகள் வெளிவந்துள்ளன. அவர் அடுத்து தமிழ்/தெலுங்குவில் உருவாகவுள்ள ஒரு புது திரைப்படத்தை இயக்கவுள்ளார். 


இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா ஹீரோவாக நடிக்கவுள்ளார். மேலும் இந்த படம் ஆக்ஷன் எண்டெர்டைனர் திரைப்படமாக உருவாக, வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.


Find out more: