சென்னை:
கவனம்... கவனம்... படப்பிடிப்பின் போது கும்பல் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இயக்குனருக்கு நடிகர் கண்டிஷன் போட்டுள்ளாராம்.


யார் அந்த இயக்குனர், நடிகர் என்று பார்ப்போமா! இயக்குனர் பரதன். நடிகர் விஜய். படம் பைரவாதான். இந்த படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. படத்தின் கதையில் செமத்தியாக ஒன்றி போய்விட்ட விஜய் கூடுதல் நாட்கள் எடுத்துக் கொண்டாலும் படம் அருமையாக வரவேண்டும் என்று பரதனிடம் அறிவுத்தி உள்ளார்.


மேலும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடத்திய போது அதிகளவு கும்பல் கூடியது. இதனால் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அது போல் இனி நடக்காமல் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று விஜய் கண்டிஷன் போட்டுள்ளதால் பரதன் செக்யூரிட்டியை டைட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



Find out more: