சென்னை:
போதாத காலத்தில போலீசிலும் புகாரா? போதுமடா சாமின்னு நொந்து போய்கிடக்கிறார் கஞ்சா கருப்புன்னு கோலிவுட் கோகிலாக்கா விஷயத்தை சொல்றாங்க...


என்னன்னா? ராம் படத்தில் பிரபலமான கஞ்சா கருப்புக்கு அப்புறம் ஏறுமுகம்தான். காமெடியனாக தமிழ் சினிமாவை கலக்கியவர் பின்னர் சொந்த தயாரிப்பில் படம் எடுத்தார். இதில் ஏகப்பட்ட நஷ்டமாம். இந்நிலையில் இவர் மீது பெண் இயக்குனர் ஒருவர் போலீசில் புகார் கொடுக்க... பஞ்சாயத்து ஸ்டார்ட் ஆகி இருக்கு.


ஒரு வார பத்திரிகைக்கு கஞ்சாகருப்பு கொடுத்த பேட்டியில் என் பணத்தை வீ.கே.சுந்தர் மற்றும் அவர் மனைவி சந்திரா ஏமாற்றிவிட்டனர். என் சொத்தை அபகரிக்க நினைக்கின்றனர் என்று சொல்லியிருந்தார். 


இதற்காகத்தான் அவர் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த சந்திரா 'கள்ளன்' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


Find out more: