சர்ச்சை நாயகன் சிம்பு தனது கடைசி படமான அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் படத்தின் படு தோல்வியை தொடர்ந்து பல பிரச்சனைகளில் சிக்கினார். படத்திற்கு ஒழுங்காக ஒத்துழைப்பு தராதது பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசியது என அவர் மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏராளம். ஆனால் இந்த படத்தின் தோல்விக்கு பிறகும் அவரை நம்பி அவரை வைத்து படம் எடுக்க முன்வந்தார் முன்னணி இயக்குனர் மணிரத்னம்.

Image result for simbu

அதிசயம் என்னவென்றால் சிம்பு தினமும் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வந்து படத்தில் தனது பாகங்களையும் நேரத்திற்கு முடித்து கொடுத்து விட்டது தான். இப்பொழுது செக்க சிவந்த வானம் இரண்டு மாதங்களில் வெளியீடுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் சிம்பு இப்பொழுது பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அதில் ஒன்றாக சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தை சிம்புவை வைத்து இயக்க உள்ளதாக அறிவித்தார்.

Image result for simbu

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தாயாரிப்பில் வெளியாக உள்ள இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும், இது எந்த படத்தின் அடுத்த பாகமும் இல்லை, இது ஒரு முற்றிலும் புதிய கதை என்றும் வெங்கட் பிரபு அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்திற்கு சிம்புவின் அதிரடி என்று பெயர் வைத்துள்ளதாகவும் இதன் டேக்லைனாக "எ வெங்கட் பிரபு ஆக்ஷன்" என்று வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 


Find out more: