ராஞ்சி:

மகிழ்ச்சிங்க... நெகிழ்ச்சிங்க... நம்ம பிரதமரால் நமக்கு பெருமைங்கன்னு புகழ் மாலையை அள்ளி அள்ளி சூட்டியுள்ளார் மத்திய அமைச்சர். யாருன்னு கேட்கிறீங்களா? நம் ராம்விலாஸ் பாஸ்வான்தான். எதற்கு?


ஜார்கண்ட் மாநிலம் மேதினிநகரில் நிருபர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பேசியதுதான் செம ஹைலைட். இவரது பேச்சில் அம்புட்டு ஐஸ் மலை... அதையே புகழ் மாலையாக போட்டுட்டார். 


அவர் பேசியது: வளர்ச்சி ஒன்றையே தாரக மந்திரமாக கொண்டு பிரதமர் மோடி செயல்படுகிறார். இந்தியாவின் பெயரை இரண்டே ஆண்டுகளில் உலக அரங்கில் கொண்டு சேர்த்த பெருமைக்கு சொந்தக்காரர் பிரதமர் மோடி. (ஏங்க்கண்ணா... அப்ப இதுக்க முன்னாடி இந்தியான்னா யாருக்கும் தெரியாதுங்களா?)


இந்தியாவுக்கு தற்போது உலக நாடுகள் அதிக மதிப்பளிக்கின்றன. இது முன்னெப்போதும் இல்லாதது. அமெரிக்காவின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு இந்தியாவை பலரும் பார்க்கின்றனர். (ஹே யாருப்பா... அங்க... 10 கைக்குட்டை டில்லிக்கு பார்சல்) இந்தியாவின் மரியாதையை சர்வதேச தரத்திற்கு பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார். இதுபோன்ற பெருமை வேறு இந்தியத் தலைவர்கள் யாருக்கும் கிடைத்ததில்லை. இப்படி புகழ்ந்து தள்ளிவிட்டார் போங்க...

Find out more: