சென்னை:
ரத்தக்கறை படிந்த சட்டை காட்டிக் கொடுத்ததாக ராம்குமார் கைது சம்பவத்தில் தற்போது ஒரு "திடுக்" தகவல் வெளியாகி உள்ளது. இதுஉண்மையா? அல்லது கட்டுக்கதையா என்பதை போலீசார் தான் தெளிவுப்படுத்த வேண்டும். 


சுவாதியை ரயில் நிலையத்தில் வெட்டிக் கொன்று விட்டு ஹாயாக தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளான் ராம்குமார். கொலை சம்பவத்தின் போது ரத்தம் படிந்த தனது சட்டையை அங்கே ஹேங்கரில் தொங்க விட்டுள்ளான். பின்னர் தனது சொந்த ஊரான செங்கோட்டைக்கு கிளம்பி சென்று இருக்கிறான்.


 சூளைமேடு பகுதி முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடிய போது எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அப்போதுதான்
போலீஸ் அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. போனில் பேசிய அந்த நபர் “சுவாதியை கொலை செய்த கொலையாளி எங்கள் விடுதியில் தங்கியிருந்தான். உடனே வாருங்கள்” என்று தெரிவித்தாராம். உடன் பரபரப்படைந்த அந்த அந்த அதிகாரி அங்கு விரைந்து சென்று விசாரணை செய்துள்ளார்.


 அந்த விடுதியில் ராம்குமாருடன் தங்கியிருந்த ஒருவர் ராம்குமாரின் சட்டையை பார்த்துள்ளார். டிவியில் காட்டப்பட்ட சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்த சட்டை போலவே அது இருந்ததால் உடன் போலீஸ் அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். 


 இந்த தகவலை வைத்து தான் போலீசார் ராம்குமார்தான் கொலையாளி என்ற முடிவுக்கு வர முடிந்தது என்று கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என்பதை போலீசார்தான் தெரிவிக்க வேண்டும்.


Find out more: