சென்னை:
அப்போ நீங்க... இப்போ நான் செய்யறேன் என்று கேப்டன் களம் இறங்கி இருக்கிறாராம். எதற்காக என்று கேட்கிறீர்களா?
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் செமத்தியான அடியை தேமுதிகவிற்கு கொடுத்துள்ளது. இந்த தோல்விக்கு பிறகு , தேமுதிகவினர் பிற கட்சிகளுக்கு டைவ் அடிப்பது அடிக்கடி நடந்து வருகிறது. இப்படியே போனால் கேப்டன் மட்டும்தான் மிஞ்சுவார் போலுள்ளது.
இந்நிலையில் தன் தீவிர விசுவாசிகளை மாவட்ட செயலர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் விஜயகாந்த் நியமித்தார். ஆனால் அவர்களிடம் கட்சியை வழி நடத்தும் அளவுக்கு பணம் இல்லை.
இதனால் பலரும் கட்சி செயல்பாடுகளில் ஆர்வமில்லாமல் உள்ளனர். இதற்கிடையில் வரும் 25ம் தேதி தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு கட்சி முக்கிய நிர்வாகிகளுக்கு அன்றைய தினம் மட்டன் பிரியாணி விருந்தளிக்க விஜயகாந்த் ஏற்பாடு செய்துள்ளாராம்.