சேலம்:
காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் விஷம் குடித்து கல்லூரி மாணவி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


விஷயம் இதுதாங்க... சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே சின்ன புனல்வாசல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் சசிகலா (19). தலைவாசல் அருகே தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.


இவருக்கும், ஆத்தூர் சீலியம்பட்டியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஜெயப்பிரகாசுக்கும் காதல் ஏற்பட்டது.  தொடர்ந்து வந்த நாட்களில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜெயப்பிரகாசிடம், சசிகலா கேட்டுள்ளார். இதற்கு ஜெயப்பிரகாஷ் மறுப்பு தெரிவித்துவிட்டு சென்னைக்கு சென்று விட்டார். தொடர்ந்து அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.


பின்னர் வீட்டுக்கு ஜெயப்பிரகாஷ் வந்துள்ளார். இதை அறிந்த சசிகலா அங்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் அவரை வற்புறுத்தினாராம். ஆனால் ஜெயப்பிரகாசின் தந்தை நடேசன், தாய் லதா ஆகியோர் சசிகலாவை திட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த சசிகலா தன் வீட்டுக்கு வந்து விஷம் குடித்தார். சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி சசிகலா இறந்தார்.


இந்நிலையில் சசிகலாவின் காதல் விவகாரம் அறிந்த உறவினர்கள் அவருடைய உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் சசிகலாவின் உடலை பெற்றுச்சென்றனர். 


தற்போது, ஜெப்பிரகாஷ், நடேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Find out more: