வாஷிங்டன்:
இந்த புகழும் இறைவனுக்கே என்று சொன்னாலும் சொல்வார் இசைப்புயல். எதற்காக தெரியுங்களா?


இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பின்பு ஐ.நா.சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய 2வது இந்தியர் என்ற மாபெரும் பெருமையை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பெற்றுள்ளார். இதற்காகத்தான் அப்படி சொன்னாலும் சொல்வார் என்று கூறினோம்.


இந்தியாவின் 70 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதே நேரம்  இந்தியாவின் சுதந்திர தினம் ஐ.நா. சபையிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ஐநா. சபை தூதர்கள், சர்வதேசத் தலைவர்கள் முன்னிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசைக்கச்சேரி அரங்கேறியது.


புகழ்பெற்ற பாடகர் ஜாவேத் அலி, டிரம்ஸ் சிவமணி ஆகியோருடன் ஏ.ஆர்.ரகுமானின் இரண்டு சகோதரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பின் ஐ.நா.சபையில் இசைநிகழ்ச்சி


Find out more: