இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல் கட்சித் தலைவருமான இம்ரான் கான் 3வது திருமணம் செய்ததாக செய்தி வெளியிட்ட, 13 'டிவி' சேனல்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், பத்திரிகையாளராக இருந்த ரெஹம் கான் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். ஆனால், சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று விட்டனர்.


தொடர்ந்து இம்ரான் கான், பிரிட்டன் தலைநகர் லண்டனில், மூன்றாவது திருமணம் செய்ததாக பாகிஸ்தானில் உள்ள, 'டிவி' சேனல்கள் செய்தி வெளியிட பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவதுாறாக செய்தி வெளியிட்டதாக, இம்ரான் கான் சார்பில், பாகிஸ்தான் எலக்ட்ரானிக் மீடியா ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. 


இதற்கு பிறகு நடந்துச்சு பாருங்க... அதிரடி ஆக்சன்... புகார் திரும்பப் பெறப்பட்டாலும் ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி தவறாக செய்தி வெளியிட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த, 13 'டிவி' சேனல்களுக்கு, தலா ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் போட்டு இருக்கு. அதுமட்டுமா?  'இந்த அபராதத்தை கட்டல... உரிமம் ரத்து என்றும் அதிரடித்துள்ளது. 



Find out more: