நெல்லூர்:
ஜோதிடர் சொன்னார்... அறிவில்லாத கணவர் வீட்டு உறவினர்கள்  கர்ப்பிணி பெண்ணை உயிருடன் கொளுத்திய சம்பவம் ஆந்திரா மாநிலத்தையே பற்றி எரிய செய்துள்ளது.


ஆந்திர மாநிலம் நெல்லூரில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கர்ப்பிணி பெண் ஒருவர் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று ஜோதிடர் கணித்து கூறியுள்ளார். 


இதனால் கணவர் வீட்டு உறவினர்கள் அப்பெண்ணை கர்ப்பிணி எனக்கூட பார்க்காமல் தீ வைத்து கொளுத்தி உள்ளனர். இதில் பலத்த தீக்காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஆந்திர மாநிலத்தையே ஆட்டி வைத்து வருகிறது. 



Find out more: