கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் லாரி ஒன்று தடம் மாறி  வீட்டுக்குள் புகுந்ததில் கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


கொடைக்கானலில் இருந்து மதுரையை நோக்கி பொருட்கள் ஏற்றிய  லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. வத்தலகுண்டு மலைப்பாதையில் செல்லும்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த லாரி தடம் மாறி அங்குள்ள வீட்டின் மீது விழுந்தது.


இதில் வீட்டில் இருந்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் லாரி டிரைவர் மதுபோதையில் ஓடியதால்தான் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.


Find out more: