டமாஸ்கஸ்:
சிரியா நாட்டு போர் விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சிரியாவின் டேய்ர் அல் ஸோர் பகுதியில் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியா விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.ஜி. ரகப் போர் விமானத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தினராம். இந்த திடீர் தாக்குதலால் போர் விமானத்தில் இருந்த விமானி பலியாகி விட்டதாக மனித உரிமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.


இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சிரியா படைகள் தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளை தாக்க ஆயத்தம் ஆவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Find out more: