டோக்கியோ:
மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் ஜப்பான் நாட்டின் தென்பகுதியை சூறையாடிய மலாக்காஸ் புயலால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இப்போது டோக்கியோவை நோக்கி இந்த புயல் விரைகிறதாம். இதனால் மக்கள் வெகுவாக அச்சத்தில் உள்ளனர். 


ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள மாகாணங்களை சக்திவாய்ந்த மலாக்காஸ் புயல் கடுமையாக தாக்கியது. மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் இந்த புயல் வீசியது. இதனால் குமாமாட்டோ உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வசிக்கும் 6 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களில் சென்று தங்க அறிவுறுத்தப்பட்டது. 


இப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கியூஷீ விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் நூற்றுக்கும் அதிகமான விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.


தென்பகுதியில் கரையை கடந்த இப்புயல் சற்று வீரியம் தணிந்து ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பசிபிக் பெருங்கடல் வழியாக தலைநகர் டோக்கியோவை நோக்கி விரைகிறது என்ற தகவல் மக்களை அச்சப்பட வைத்துள்ளது.


Find out more: