![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/politics/politics_latestnews/dfdff-415x250.jpg)
நடிகை பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுப் பிரிவு சேர்ந்த போலீசார் நடிகை காவ்யா மாதவனிடம் பலமணிநேரம் கடும் விசாரணை நடத்தினர். கடந்த பிப்ரவரி மாதம் பிரபல நடிகை படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் திடிர்ரென்று கடத்தப்பட்டார். காரில் வைத்து நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காட்சிளை மர்ம நபர்கள் அவர்கள் செல்போனில் படம் பிடித்தனர். விசாரணையில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் போலீசாரிடம் வசமாக சிக்கினான்.
அவன் அளித்த தகவல்களின் அடிப்படையிலும், கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலும் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் திலீப்பின் மனைவியும் பிரபல நடிகையுமான காவ்யா மாதவனிடம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீசார் நேற்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த கடத்தல் குறித்து ஏற்கனவே காவ்யா மாதவனுக்கு தெரியுமா என்று போலீசார் நேற்றைய விசாரணையின் போது அவரிடம் கேட்டுள்ளனர். குற்றச் செயலுக்கான ஆதாரம் என்று தெரிந்தே காவ்யாவின் ஜவுளிக்கடையில் செல்போன் மெமரி கார்டு பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டதா, செல்போனில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் வேறு பிரதி எடுத்து வைக்கப்பட்டதா என்றும் போலீசார் கடுமையாக கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் காவ்யா மாதவனும் கைது செய்யப்படலாம் என்று கேரளா வட்டார தகவல்கள் நமக்கு தெரிவிக்கின்றன.