திருவாரூரில் அமைந்து உள்ள இந்த நடனேஸ்வர் திருக்கோவிலிற்கு சென்று, நாம் வழிப்பட்டு வந்தால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் பெறலாம். 


இந்த கோவிலில், ஈசன், விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், காளி தேவி ஆகியோர் தனி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் வரும் ராகு காலத்தில், இந்த காளிதேவியை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். குழந்தைப் பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


தினமும்  காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். ஆண்டுதோறும் பங்குனி மாத கடைசி இரண்டு நாட்களும், சித்திரை முதல் இரண்டு நாட்களும், இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுந்து, சூரிய பூஜை நடக்கிறது. 


சூரிய பூஜை நடைபெறும் போது, இந்த கோவிலிற்கு வந்து வழிப்பட்டால், ஆரோக்கியமான வாழ்வு பெறலாம்.


Find out more: