உத்தவேதீஸ்வரர் திருக்கோவில், குத்தாலம் ஊரின் நடுவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமைந்திருக்கும் ஊரை திருத்துருத்தி என்று அழைப்பார்கள். 


இக்கோவிலில் உள்ள கடவுள்களை நாம் வழிபட்டால், திருமண தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து முடித்த பின், சாமியின் கழுத்தில் அணியப்பட்ட மாலையை, திருமண தடை இருப்பவர்கள் அணிந்தால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும்.


இந்த தளத்தின் முன்புறம் படிக்கட்டுகளுடன் கூடிய ஆழமான தீர்த்தக்குளம் உள்ளது. இது ‘சுந்தரர் தீர்த்தக்குளம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சுந்தர தீர்த்தக்குளத்தில், மனத்தூய்மையுடன் இறைவனை நினைத்து நீராட வேண்டும். 48 நாட்கள் தொடர்ந்து இந்த தள கடவுளை நினைத்து, தீர்த்தத்தில்  நீராடி, உடம்பு முழுவதிலும் திருநீற்றை பூச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், தோல் நோய்கள் குணமடையும். 



Find out more: